இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுக்கப்பட்டு கொலை; மனநலமற்ற தாய் மீது சந்தேகம்: நிந்தவூரில் சம்பவம்

🕔 July 29, 2019

– பாறுக் ஷிஹான் –

ன்பது மாதங்கள் நிரம்பிய இரட்டைப் பெண் குழந்தைகள் கழிவறையில்  வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் 14ம் பிரிவில்  இன்று திங்கட்கிழமை வீடு ஒன்றின் குளியலறையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள போதிலும் இப்படுகொலையை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயாரான  26 வயதுடைய சந்தேக நபர் நிஹாமுதீன் அஹமட் அமீஸா என்பவர்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை  பொலிஸார் மற்றும் அம்பாறை தடயவியல் பொலிஸார்    விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகிக்கப்படும் குழந்தைகளின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காணப்படுவதாகவும்,இவர்  நிந்தவூர் ஆதார வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்படுகிறது.

வீட்டில் இருந்த  குழந்தைகளின் தந்தைய  அலியார்  சியாதுல் ஹக் என்பவரிடம் (வயது-36) விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

குழந்தைகளைஅறுத்ததாக சந்தேகிக்கபடும் கத்தியை, அறுத்த  அதேஇடத்தில் வைத்துவிட்டு பின்னர்  தனது கணவரிடம் பிள்ளைகளின் கழுத்தை அறுத்து விட்டேன் என, தாய் கூறியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்