ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இரண்டு வாரங்களில் கூறுவேன்: சமல் ராஜபக்ஷ

🕔 June 18, 2019

னாதிபதித் தேர்தலில் – தான் போட்டியிடுவதா, இல்லையா என்பது பற்றிய அறிவிப்பை வெளியிடுவதற்கு இன்னும் காலம் உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சமல் ராஜபக்‌ஷ களமிறங்கவுள்ளாரென, பல்வேறு தரப்பிலும்  ​அறிவிப்புகள் வெளியாகி வருகின்றமை தொடர்பில், கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிட தான் தயாரில்லை என்றும், எதிர்வரும் இரண்டு வாரங்களில் இது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் பல்வேறு தரப்பினரும் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டி​யிடுமாறு, உத்தியோகப்பூர்வமற்ற ரீதியில் ​கோரிக்கை விடுத்து வருவதாகவும் இது தொடர்பாக உத்தியோகப்பூர்வமாக தன்னிடம் தெரிவித்தால், அது குறித்து ஆராய்ந்து பார்க்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்