வான் படையின் புதிய தளபதியாக, எயார் மார்ஷல் டயஸ் நியமனம்

🕔 May 29, 2019

லங்கை வான்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் டி.எல்.எஸ். டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று புதன்கிழமை தனது நியமனக் கடிதத்தை எயார் மார்ஷல் டயஸ் பெற்றுக்கொண்டார்.

இவர் இலங்கையின் 17ஆவது வான்படைத் தளபதி என்பது குறிப்பிடத்தது.

இதேவேளை, முன்னாள் வான்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, நான்கு நட்சத்திர தரம் வழங்கப்பட்டு, எயார் சீஃப் மார்ஷல் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்