ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை குறித்து திஸ்ஸ விதாரண கண்டனம்

🕔 May 27, 2019

பொதுபல சேனா  அமைப்பின் பொதுச்செயலாளர்  ஞானசார தேரருக்கு  ஜனாதிபதி  பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளமை ஒருதலைபட்சமானது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

இவரின் விடுலையைச் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள்  நீதியினை கோரும் போது  பிரச்சினைகளே ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

‘கடந்த காலங்களில் ஞானசார தேரர் கடுமையான முறையில் பிற  இனங்கள் மீது  இனவாத கருத்துக்களை பகிரங்கமாக கட்டவிழ்த்து விட்டார்.

இதன் காரணமாக பல விளைவுகள் ஏற்பட்டன.  இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள்  நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் சிறைவாசம அனுபவித்த  ஞானசார தேரருக்கு எவரும் எதிர்பாராத விதத்தில் பொதுமன்னிப்பு வழங்கியமை வருந்தத்தக்கது.

ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் பிரகாரம்  பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இருக்கலாம். ஆனால் அதனை   முறையாக செயற்படுத்தியிருக்க வேண்டும். 

இவரது விடுதலையினை தொடர்ந்து  மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் நீதித்துறையினை நாடும் போது பிரச்சினைகளே ஏற்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்