றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு: மஹிந்த தரப்பு தெரிவிப்பு

🕔 May 13, 2019

மைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் தம்முடைய முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே, அவர் இதனைக் கூறினார்.

அதேவேளை, குண்டுத்தாக்குதல்களில் இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாவும், பாரியளவில் காயமேற்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாவும் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், இறந்தவர்களுக்கு குறைந்தபட்சம் தலா 50 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 10 தொடக்கம் 20 லட்சம் ரூபா வரையிலும் வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று தாக்குதல்களால் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருப்பின் அவர்களின் எதிர்காலத்துக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்