கொச்சிக்கடை தேவாலய தற்கொலைக் குண்டுதாரியின் சகோதரன் உள்ளிட்ட மூவர் கைது

🕔 May 9, 2019

கொழும்பு – கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் சகோதரன் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு – கொச்சிக்கடை கிறிஸ்துவ தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய தற்கொலைதாரி, கிங்ஸ்பரி ஹோட்டலில் தாக்குதல் நடத்திய நபருக்கு சொந்தமான வாகனத்திலேயே வந்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணை சம்பந்தமான அறிக்கை சமர்பிக்கும் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இதனைக் கூறியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்