வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமை குறித்து, த.தே.கூட்டமைப்பு ஏன் எதிர்ப்பு வெளியிடவில்லை: ஜோன்ஸ்டன் கேள்வி

🕔 March 23, 2019

டக்குக்கு மாகாண சபைத் தேர்தலை நடைத்தப்படாததற்கு எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏன் வெளிப்படுத்தவில்லை என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று சனிக்கிழமை சபையில் சகேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்று கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் கேட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரியில்லை. அவர் சர்வாதிகாரி என்ற எண்ணத்தை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரை வாங்கிகொண்டு – ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரே உண்மையான சர்வதிகார ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர்.

எமது ஆட்சியில் கடன் வாங்கியதாகவும் அதுவே நாட்டினை நாசமாக்கியுள்ளது எனவும் ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ கடன்  வாங்கினார், ஆனால் அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

நீங்களும் கடன்களை பெற்றீர்கள், ஆனால் வேலைத்திட்டங்கள் என்ன நடந்துள்ளன. நீங்கள் வாங்கிய கடன் எங்கே? அந்த பணம் என்னவானது கடன்களை குறைக்க வேறு கடன்களை வாங்கினால் நாட்டின் கடன் தொகை குறையாது அவ்வாறே உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆட்சியில் நாட்டினை அபிவிருத்தி செய்யவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்