சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

🕔 February 28, 2019
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் அதிவிசேட திறமையில் சித்தி பெற்ற, சுப்றா தர நிருவாக உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் நேற்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்ற வைபவத்தில் மட்டக்களப்பு, அம்பாறை  மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிவிசேட திறமையில் சித்தி பெற்ற சுப்றா நிறுவாக உத்தியோகத்தர்கள் 23பேருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வைபவத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம். சரத் அபய குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அசீஸ், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எம்.வை. சலீம், கல்வி, வீதி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்