அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை?

🕔 February 10, 2019

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் சில மில்லியன்களுக்கான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்களை நாட்டியுள்ளார்.

இங்கே உள்ள படத்தில் இருப்பது, கடந்த வருடம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டப்பட்ட அடிக்கல் வைபவத்தின் காட்சியாகும்.

ஏறத்தாழ 08 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்த அடிக்கல்லுக்கான எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் இதேபோல ஒரு கட்டடம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் எந்த சந்தடியும் இன்றி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடப்பட்ட கல் ஏன் முளைக்கவில்லை ??

நீங்கள்தான் இதற்கு “வாப்பா” என்றால், ஏன் பிள்ளை இன்னும் வளருது இல்லை??

(ஜவ்ஸி அப்துல் ஜப்பார் – பேஸ்புக் பதிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்