லாபத்தில் இயங்குகிறது அரச வர்த்தகக் கூட்டுத்தபானம்: தலைவர் ஹுசைன் பைலா தெரிவிப்பு

🕔 January 30, 2019
கைத்தொழில்  மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான அரச வர்த்தக கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 61.4 மில்லியன் ரூபா லாபம் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஹுசைன் பைலா தெரிவித்தார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும் நேரடி கண்காணிப்பிலும் இந்த கூட்டுத்தாபனம் இவ்வாறான ஒரு லாபத்தை ஈட்ட முடிந்தது என தெரிவித்த அவர், இவ்வருடம் காலி , திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் புதிய கிளைகளை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

1971 ஆம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளைகள் தற்போது நாரஹேன்பிட்டி , அனுராதாபுரம் , யாழ்ப்பாணம் ,கண்டி, மாத்தறை , பொலநறுவை, குருணாகல் மற்றும் சாய்ந்தமருது ஆகிய இடங்களில் தற்போது இயங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 ஆம் ஆண்டு 15.6% லாப அதிகரிப்பு ஏற்பட்டது. கொழும்பு நவமாவத்தையை  தலைமையமாகக் கொண்ட அரச வர்த்தக கூட்டுத்தாபனமானது அலுவலக உபகரணம், எழுதுகருவிகள், காகிதாதிகள், கணனிகள், மடிக்கணினி , ரசாயன மருந்துப்பொருட்கள், குளிரூட்டிகள், இயந்திராதிகள், இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் மின் உபகரணங்கள் ஆகியவற்றினை விற்பனை செய்து வருகின்றது .

Comments

புதிது பேஸ்புக் பக்கம்