பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், ‘போதைப் பொருள் ஒழிப்பு’ விழிப்புணர்வு நிகழ்வு

🕔 January 23, 2019

– எம்.ஐ.எம். அஸ்ஹர் –

ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் – களுவாஞ்சிகுடியில் இன்று வியாழக்கிழமை, போதைப் பொருள் ஒழிப்பு வார நிகழ்வு இடம்பெற்றது.

பாடசாலை அதிபர்  கே. தம்பிராஜா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொலிஸார் கலந்து கொண்டு – மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டீ.எம். பாறூக் , களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்த்தன , களுவாஞ்சிகுடி வீதி போக்குவரத்து  பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எச்.ஜீ. தயானந்த, பாடசாலை பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பணிப்புரையின் பேரில்,  நாடு தழுவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் போதை பொருள் பாவனையை முற்றாக ஒழிப்பது சம்பந்தமாக விழிப்பணர்வை ஏற்படுத்தும் வகையில், இவ்வாரம் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை – தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரமாக கல்வியமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்