அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

🕔 January 17, 2019

– அஹமட் –

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் தரம் – 01 மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று வியாழக்கிழமை, அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தரம் – 01 மாணவர்களை, தரம் – 02 மற்றும் 03 மாணவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றதோடு, அதிதிகள் சம்பிரதாயபூர்வமாக அகரம் எழுதக் கற்றுக் கொடுத்தனர்.

தரம் – 01 மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், கல்வி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் உள்ளிட்டோர் அதிதிகளாக பங்கேற்றனர்.

இதன்போது, மூத்த மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்