இரட்டைக் குடியுரிமை குற்றச்சாட்டு; சுமந்திரன் மறுப்பு: சேறு பூசுவோர் யாரெனவும் தெரிவிப்பு

🕔 December 29, 2018
– பாறுக் ஷிஹான் –

ரட்டைக் குடியுரிமையினை தான் கொண்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை குறித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனுக்கு மறுத்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான் உட்பட  மூன்று பேருக்கு, இரட்டைக் குடியுரிமை உள்ளது எனவும்  அது  தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை நாடி குறித்த  நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பதவியை இல்லாமலாக்குவோம் என தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறான இரட்டைக் குடியுரிமை எனக்கு மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவருக்கும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகின்றேன்.

அண்மைக்காலமாக எனது  நடவடிக்கையால் மிகவும் நொந்துபோயுள்ள மஹிந்த அணியினர், என் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது தென்னிலங்கை கடும்போக்கு அரசியல்வாதிகளால் அதிகம் விமர்சிக்கப்படுபவராகவும் நான் உள்ளேன்.

இதனால்தான்  இவ்வாறான பொய்யான பிரசாரங்களை என்  மீதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதும்  மேற்கொண்டு வருகின்றனர் என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்