பேருவளை ஹெரோயின் கடத்தல் விவகாரம்: பிரதான சந்தேக நபர்கள் பற்றிய தகவல் வெளியானது
பேருவளை கடற்பரப்பில் வைத்து கடந்த வாரம் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் சீசெல்ஸ் மற்றும் பங்களாதேஸ் நாடுகளில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக குறித்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் ஒருபகுதி வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பேருவளை – பலபிட்டி கடற்பரப்பில் கடந்த புதன்கிழமையன்று 231 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.