நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்புக்கான இடைக்காலத் தடை: 08ஆம் திகதி வரை நீடிப்பு

🕔 December 6, 2018

– அஹமட் –

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அறிவித்தலுக்கான இடைக்காலத் தடையினை 08ஆம் திகதி வரை உச்ச நீதிமன்றம் நீடித்துள்ளது.

ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளை தொடர்ந்தும் விசாரிக்க வேண்டி உள்ளமையினால், இந்த நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து கடந்த மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை தடை செய்யுமாறு கோரி, உச்ச நீதிமன்றில் 13 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக, நொவம்பர் 13ஆம் திகதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்த நிலையில் நேற்று புதன்கிழமையும், இன்றைய தினமும் மேற்படி வழக்கு விசாரணைகள் 07 நீதியரசர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தன.

இதேவேளை மேலும் வழக்கு விசாரணைகள் உள்ளமையினால், 08ஆம் திகதி வரை, இடைக்காலத் தடையினை நீடிப்பதாக உச்ச நிதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்