இறக்காமம் காபட் வீதி வேலைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக, பொலிஸில் முறைப்பாடு

🕔 December 4, 2018

– அஹமட் –

றக்காமம் பிரதான வீதியை, காபட் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் மிக நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வீதி வேலை முடிவுறாமைக்கு எதிராக தமண பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் கே.எல். சமீம், இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளார்.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளருக்கு எதிராக, மக்கள் நலன் கருதி ‘பொதுத்தொல்லை’ குற்றவியல் நடை முறை கோவைச்சட்டம் 98 (1) ன் கீழ், மேற்படி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அமைப்பாளர் சமீம் தெரிவித்தார்.

மேற்படி சட்டத்தின் பிரகாரம், ‘பொதுத் தொல்லை’யின் கீழ் – தனிநபர் முறைப்பாடு செய்ய முடியாது என்பதனாலும், ஆகக் குறைந்தது 05 பேர் கூட்டாக முறையிட வேண்டும் என்ற நியதியின் அடிப்படையிலும், ஐக்கி சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளர் சமீமுடன் இணைந்து, மேலும் நான்கு பேர், மேற்படி வீதி முடிறுத்தப்படாமைக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.

சுமார் ஒன்றரை வருடங்களாக இந்த வீதி நிர்மாண வேலைகள் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயணம் செய்வதிலும் மாணவர்கள் பாடசாலை செல்வதிலும் பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், தேவையற்ற நோய்கள் உருவாகுவதாகவும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் புழுதி சுவாசிக்கப்படுவதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக ரஊப் ஹக்கீம் பதவி வகித்த போது, இந்த வீதியை, காபட் வீதியாக புனரமைப்பதற்கான நிதி ஒதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்