நாடாளுமன்றம் கூடும் திகதி தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு

🕔 November 1, 2018

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி இதுவரை திகதி எதனையும் உத்தியோகபூர்வமாகத் தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்படி அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதியொன்றினை தாம் இன்னும் தீர்மானிக்கவில்லை என்று, சபாநாயகர் அலுவலகமும் கூறியுள்ளது.

நொவம்பர் 07 அல்லது 07ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதிலும், அது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்