மாகாண சபைத் தேர்தலை டிசம்பரில் நடத்த, அரசாங்கம் முடிவு

🕔 July 4, 2018

மாகாண சபைத் தேர்தல்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமாகத் தெரியவந்துள்ளதென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை வகித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் பைசர் முஸ்தபா, எல்லை நிர்ணய குழுவினர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.

எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பிலும் அவர்கள் அங்கு பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்