கோட்டாவுக்கும் தனக்குமிடையிலான உறவு குறித்து, பசில் ராஜபக்ஷ விளக்கம்

🕔 June 28, 2018

கோட்டாபய ராஜ­ப­க்ஷ­வுக்­கு­ம் தனக்குமிடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது சகோதர் கோட்டாவும், தானும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“எனக்கும் எனது சகோ­தரர் கோட்டாபய ராஜபக்ஷவுக்­கு­மி­டையில் நெருக்­கடி நிலவுவதாக பிர­சாரம் செய்­து­வ­ரு­கின்­றனர். ஆனால் எனக்கும் எனது சகோ­தரருக்கும் இடையில் எந்­த­வி­த­மான பிரச்­சி­னைகளும் இல்லை.

நாங்கள் இரு­வரும் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு வரு­கின்றோம்.எப்­ப­டி­யி­ருப்­பினும் ஜனா­தி­பதி தேர்தல் வரும்­போது, யார் ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதை மஹிந்த ராஜபக்ஷ தீர்­மா­னிப்பார். மஹிந்­த­ ராஜபக்ஷவைத்தான் மக்கள் விரும்­பு­கின்­றனர்.

எனவே மஹிந்­த ­ராஜபக்ஷ யாரை கள­மி­றக்­கு­கின்­றாரோ, அவர் வேட்­பா­ள­ராக வருவார். அவரின் வெற்­றிக்­காக நாங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுவோம்.

எனக்கும் சகோ­தரர் கோட்டாவுக்கும் இடையில் எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. நாங்கள் ஒற்­று­மை­யு­டனும் செயற்­பட்டு வரு­கின்றோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்