காணாமல் போன அண்ணன், தங்கை சடலங்களாக மீட்பு

🕔 November 28, 2017

– க. கிஷாந்தன் –

ஸ்கெலியா – கவரவில தோட்டத்தில் பாக்றோ பிரிவில் காணாமல் போயிருந்த அண்ணன், தங்கை இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்படை சுழியோடிகளின் உதவியை கொண்டு இன்று செவ்வாய்கிழமை மதியம் இந்த சடலங்கள் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை எனவும் ஒரு தாயில் வயிற்றில் பிறந்த இரண்டு தந்தையர்களின் பிள்ளைகளான சுப்பிரமணியம் மகேந்திரன் (வயது 28), பரமேஷ்வரன் மகாலெட்சுமி (வயது 19) ஆகியோர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு கனேமுல்ல பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் பணிபுரிந்த மேற்படி அண்ணன், தங்கை இருவரும் இவர்களின் தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவுக்காக கடந்த 23ம் திகதி பாக்றோ தோட்டத்துக்கு கெப் ரக வாகனம் ஒன்றில் வந்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து இவர்கள் பயணம் செய்த வாகனம் கண்டு பிடிக்கப்பட்டதோடு, இவர்கள் ஆறு ஒன்றில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

எனவே, மஸ்கெலியா பொலிஸார் கொழும்பில் உள்ள கடற்படை சுழியோடிகளின் உதவியை நாடியிருந்தனர். இந்த நிலையில் சுழியோடிகள் மதியம் 1.30 மணியளவில் வருகை தந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்ட சில நிமிடங்களில் சடலங்கள் இரண்டையும் மீட்டனர்.

தொடர்பான செய்தி: கொழும்பிலிருந்து ஊர் வந்த, அண்ணன் தங்கை மாயம்; தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்