எங்களை தோற்கடித்தவர்களுக்கு ஆதரவாக, நாங்களே களமிறங்கியுள்ளோம்: நாமல் பெருமிதம்

🕔 August 27, 2017

சிறுபான்மை மக்களை மிக அதிகமாக பாதிக்கக் கூடிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்டமூலத்துக்கு, கூட்டு எதிர்க்கட்சியினர்தான் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்யைில்;

“சிறுபான்மை மக்கள் இந்த ஆட்சியாளர்களுடையதும். எங்களினதும் உண்மை முகங்களை அறிந்துகொள்ளும் பொருட்டு, பலவிடயங்களை இவ் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமான சட்ட மூலமானது, சிறுபான்மை மக்களை அதிகம் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

நாங்கள் இலங்கை நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இயற்றிய சட்ட மூலத்தை, இவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக பாவிப்பார்கள் என்று, நாம் சிறிதும் நினைத்திருக்கவில்லை.

இது நிறைவேற்றப்படுகையில், ஒரு சமூகத்துக்கு எதிராக மேற்கொண்ட குரோத செயற்பாடுகளின் பழியை, எங்கள்மீது இந்த ஆட்சியாளர்கள் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எங்கள் மீது சிலர் கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக, அதனை நம்பினாலும் நம்பி விடுவார்கள்.

இது போன்ற பல விடயங்களை கருத்தில் கொண்டு, நாம் எமது அணிகளினூடாக மேற்படி சட்ட மூலத்துக்கு பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தோம். எதிர்த்து வாக்களித்திருந்தோம். ஆனால், இதனை எதிர்த்து வரிந்து கட்டி நிற்க வேண்டிய முஸ்லிம் தலைமைகள் ஓடி ஒழிந்து விட்டார்கள்.

இதனை எதிர்த்து வாக்களித்ததில் எங்களுக்கு என்ன இலாபமுள்ளது. சில பெயர் தாங்கி தலைவர்களைபோல வாக்களிப்பிலிருந்தாவது தவிர்ந்திருக்கலாம்.

இவர்கள் எச் சட்ட மூலத்தை கொண்டு வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்.

சிறுபான்மையினரால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சியினர்தான், கடைசியில் அவர்களுக்கு பாதகமான சட்டமூலத்துககு எதிராக வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்