ஞானசார தேரர்; என்னா வேகம்: கின்னஸ் சாதனைதான் போங்கள்

🕔 June 21, 2017
– எஸ். ஹமீத் –

சம்பவம் – 01:
பல பொலிஸ் குழுக்களினால் பல்வேறு குற்றங்களின் அடிப்படையில் பல நாட்களாகப் தேடப்பட்டு வந்த ஒரு ‘சந்தேக நபர்’ நீதிமன்றத்தில் காலை சுமார் 10 மணிக்குச் சரணடைகிறார்.

சம்பவம் – 02: அவருக்கு நீதிமன்றம் காலை 11 மணியளவில்  பிணை வழங்குகிறது.

சம்பவம் – 03: சிரித்த முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளிவந்த சந்தேக நபர், ஆடம்பரக் காரிலேறி போகிறார்.

சம்பவம் – 04: பின்னர் பிற்பகல் 02  மணிக்கு விஷேட பொலிஸ் குழுவொன்றினால், அதே சந்தேக நபர் கைது செய்யப்படுகிறார்.

சம்பவம் – 05: அவ்வாறு கைது செய்யப்பட்டவர், அரை  மணி நேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டுச் சுதந்திரமாக வெளியேறுகிறார்.

அடேயப்பா…என்னா வேகம், இந்த வேகம்.

உலகத்திலேயே இப்படி வேக  வேகமான சரண் – பிணை – கைது – விடுதலை, நமது நாட்டில் மட்டும்தான் நடந்திருக்க முடியும்.

ஒரு வகையில் இது கின்னஸ் சாதனைதான், போங்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்