மு.கா.வின் காணியை ஹாபிஸ் நஸீர் அபகரித்த வழக்கு; நேற்றைய தினம் விசாரிக்கப்பட்டது

🕔 May 4, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான காணியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கையகப்படுத்தியுள்ளார் என பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு  நேற்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குச் சொந்தமான 110 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய காணியொன்றை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டின் யுனிட்டி பில்டர்ஸ் நிறுவனம் மோசடியான முறையில் கையகப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மோசடி தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் அறிவித்தது.

ஆவணங்களைத் திரிபுபடுத்தி, பிரதிவாதி நஸீர்மட் இந்தக் காணியினை கையகப்படுத்தியுள்ளார் என தெரிவித்து, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளராளரும் ஊடகவியலாளருமான துவான் நசீர் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் குறித்த ஆவணங்கள், வங்கிக் கணக்கு விபரங்களைப் பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை நடத்திவருவதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற்றுக்கொண்டு மேலதிக விசாரணைகளை நடத்தி விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வீடியோ (நன்றி: நியுஸ் பெஸ்ட்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்