மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம்

🕔 May 1, 2017

ஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட வருகை தந்திருந்த இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் நிவிதிகல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் என்றும், கண்டியைச் சேர்ந்த 80 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிக வெப்பம் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றிணைந்த எதிரணியின் மேதின கூட்டத்தில் பலரையும் ஆச்சரியம் கொள்ள வைக்கும் வகையில் மிக அதிகமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்