ராஜகிரிய இளைஞர் பத்தனைக்கு ‘ஜமாத்’ வந்திருந்த போது, ஆற்றில் மூழ்கி மரணம்

🕔 December 3, 2016

death-011– க. கிஷாந்தன் –

ராஜகிரிய – அத்துருகிரிய பகுதியிலிருந்து, பத்தனைப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசலொன்றுக்கு ஜமாத் சென்றிருந்த குழுவிலுள்ள இளைஞரொருவர், இன்று சனிக்கிழமை அங்குள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற போது,  நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பத்தனை பிரதேசத்துக்கு 14 பேர் கொண்ட மேற்படி குழுவினர் நேற்று சனிக்கிழமை வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் இவர்களில் சிலர் இன்று சனிக்கிழமை டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர்வழங்கும் டெவோன் ஆற்றில் குளிக்க சென்றிருந்தனர்.

இதன் போது நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞர் சுழியொன்றில் அகப்பட்டுள்ளார். இதன்போது இளைஞனை ஏனையவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ராஜகிரிய – அத்துருகிரிய பகுதியை சேர்ந்த 20 வயதான மொஹமட் சுஹைல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கி சில மணித்தியாலங்களின் பின்னர், இவரது சடலம் பத்தனை பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.death-022

Comments

புதிது பேஸ்புக் பக்கம்