பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு

🕔 September 2, 2016

Pillayan - 97
கி
ழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை சந்திரகாந்தனின் பிணை மனுமீதான விசாரணை நடைபெற்றது.

இதன்போது, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு பிணை வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லையென கூறி, பிணை மனுவினை நீதிபதி வி. சந்திரமணி நிராகரித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்திரகாந்தன் – கடந்த பத்து மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்