பதவி விலகும் எண்ணம் கிடையாது; கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யும் நோக்கம் இல்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தன்னை ராஜினாமா செய்யுமாறு அரசு தரப்பிலிருந்து எவ்வித கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
‘கிழக்கு மாகாண ஆளுநர் பதவி விலகலாம்’ எனும் தலைப்பில் நேற்று ஊடகமொன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், ஆளுநர் விடுத்துள்ள அறிக்கையிலேயே கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.