இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு: பிணை கிடைத்தும், சிறை சென்ற கல்முனை விகாரதிபதி

இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு: பிணை கிடைத்தும், சிறை சென்ற கல்முனை விகாரதிபதி 0

🕔30.Sep 2022

– பாறுக் ஷிஹான் – இளம் பிக்குககளை பாலியல்  துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் வைக்கப்பட்டுள்ள கல்முனை சுபத்ரா ராமய  விகாராதிபதி  ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் – நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிப்பதற்கு இன்று (30) நீதிமன்றம் உத்தரவு வழங்கியபோதும், , பிணைகாரர்கள் வருகை தராமையினால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச்

மேலும்...
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வெகுமதி: 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் திருக்கோவிலில் வழங்கி வைப்பு

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான வெகுமதி: 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்கள் திருக்கோவிலில் வழங்கி வைப்பு 0

🕔30.Sep 2022

சத்துணவுகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு – கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 05 ஆயிரம் ரூபா பெறுமதியான வவுச்சர்களை வழங்கும் நிகழ்வு நேற்று (29) திருக்கோவிலில் இடம்பெற்றது. வரையறுக்கப்பட்ட ‘செஜய’ மைக்றோ கிரடிட்நிறுவனம், தனது நிதி அனுசணையாளரான ஜப்பானில் உள்ளபு ‘கோஜோ’ (GOJO) அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்புடன் இலங்கையில் 7400க்கும் மேற்ப்பட்டகர்ப்பிணிகளுக்கு – ‘தாய்மைக்கான வெகுமதி’ எனும் பெயரில், 5000

மேலும்...
எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி வழங்கிய கடன் தொடர்பில் லிற்ரோ நிறுவனம் தகவல்

எரிவாயு கொள்வனவுக்காக உலக வங்கி வழங்கிய கடன் தொடர்பில் லிற்ரோ நிறுவனம் தகவல் 0

🕔30.Sep 2022

எரிவாயு விநியோகத்தை தடை இன்றி மேற்கொள்வதற்காக, உலக வங்கியிடமிருந்து கிடைத்த கடன் தொகையில் ஒரு பகுதியை திறைசேறிக்கு செலுத்தியுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த முழு கடன் தொகையும் – எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் திறைசேரிக்கு செலுத்தப்படும் என்று, லிற்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்

மேலும்...
உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம்: அமைச்சரவைக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

உள்ளூராட்சி மன்ற சட்டத்தில் திருத்தம்: அமைச்சரவைக்கு முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு 0

🕔30.Sep 2022

உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தம் குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதனை உள்ளூராட்சி மன்ற அமைச்சு உறுதி செய்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர், சட்ட வரைவு திணைக்களம் அடுத்த கட்ட

மேலும்...
பிஜேபி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு

பிஜேபி மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி கோட்டா சந்திப்பு 0

🕔29.Sep 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, இந்திய அரசியல்வாதியும் பி.ஜே.பியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துள்ளார். இலங்கை வந்துள்ள சுவாமி, கோடட்டாவை தனது குழுவினருடன் சந்தித்துப் பேசியுள்ளார். இதேவேளை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் பிரதமர் நடத்திய நிகழ்விலும் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆளும் பாஜக கட்சியின் மூத்த

மேலும்...
எரிபொருள் நிலையத்திலுள்ள இரண்டு பம்ப்களுக்கு ‘சீல்: மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை

எரிபொருள் நிலையத்திலுள்ள இரண்டு பம்ப்களுக்கு ‘சீல்: மோசடி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை 0

🕔29.Sep 2022

கொழும்பு 07 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிலுள்ள இரண்டு பம்ப்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (29) தெரிவித்துள்ளது. 92 ஒக்டெய்ன் பெற்றோல் வழங்குகம் மூன்று பம்ப்களில் இரண்டுக்கு இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜங்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த எரிபொருள் நிலையம் இலங்கை

மேலும்...
எச்சரிக்கை; மனித பாவனைக்கு தகுதியற்ற டின் மீன்கள் சந்தையில்: குறைந்த விலையில் கிடைப்பதாகவும் தகவல்

எச்சரிக்கை; மனித பாவனைக்கு தகுதியற்ற டின் மீன்கள் சந்தையில்: குறைந்த விலையில் கிடைப்பதாகவும் தகவல் 0

🕔29.Sep 2022

மனித பாவனைக்கு தகுதியற்ற டின் மீன்கள் – சட்டவிரோதமான முறையில் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகிறது. இந்த டின் மீன்கள் 2021ஆம் ஆண்டு 82 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், அவை மனித பாவனைக்கு உகந்ததல்ல என்பதால் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேற்படி டின் மீன்களே தற்போது சட்டவிரோதமாக சந்தைக்கு விடப்பட்டுள்ளது. மேற்படி 82 கொள்கலன்களிலும் சுமார்

மேலும்...
அரசாங்கத்தைக் கவிழ்க்க ரகசிய சதித்திட்டம் நடந்தமை குறித்து, அரசியல்வாதிகளிடம் பொலிஸார் விசாரணை

அரசாங்கத்தைக் கவிழ்க்க ரகசிய சதித்திட்டம் நடந்தமை குறித்து, அரசியல்வாதிகளிடம் பொலிஸார் விசாரணை 0

🕔29.Sep 2022

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்ததையடுத்து, நாடாளுமன்றத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பை தடுத்ததன் மூலம், அரசாங்கத்தை கவிழ்க்க சில அரசியல்வாதிகள் தொடர்புபட்டமை குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த அரசியல்வாதிகள் – சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் டெய்லி

மேலும்...
பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவை உண்பதில்லை; நிலைமை இன்னும் மோசமாகும்: இலங்கை தொடர்பில் அறிக்கை

பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவை உண்பதில்லை; நிலைமை இன்னும் மோசமாகும்: இலங்கை தொடர்பில் அறிக்கை 0

🕔29.Sep 2022

இலங்கையில் ஒவ்வொரு பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவு உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் அண்மைய அறிக்கையொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியானது நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மக்கள் உணவு உண்பதை விட்டு விலகிச் செல்வதாகவும் இந்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும்...
கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.தே.கட்சி உறுப்பினர் நாணயச் சுழற்சி மூலம் தெரிவு

கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐ.தே.கட்சி உறுப்பினர் நாணயச் சுழற்சி மூலம் தெரிவு 0

🕔28.Sep 2022

கண்டி – கங்காவத்தை கோரளை பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் சிசிர ரணசிங்க நாணயச் சுழற்சி மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களான சமிந்த கருணாரத்ன, ரவிப்பிரிய சமிகர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிசிர ரணசிங்க ஆகியோர் இந்தப் பதவிக்கு போட்டியிட்டனர். ஆரம்ப சுற்று வாக்குகளின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்