மைத்திரியும் மஹிந்தவும் இன்று சந்திப்பு

மைத்திரியும் மஹிந்தவும் இன்று சந்திப்பு 0

🕔31.Dec 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிசேனவும், முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவும், நேருக்கு நேராக இன்று வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.ஸ்ரீலங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின விழா நிகழ்வில் மேற்படி இருவரும் கலந்து கொண்டபோதே, இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஜனாதிபதி மைத்திரி தலைமையில் மேற்படி

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்லத் தடை

மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்லத் தடை 0

🕔28.Dec 2015

வெளிநாடு செல்வதற்கு தனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மாத்தறை, மாரவல ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வழிபாடுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்ட பின்னர், மக்களிடம் பேசியபோதே மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தகவலை வெளியிட்டார்.தன்னைப் போலவே, மேலும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த ஆட்சியில் இவ்வாறு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்போது

மேலும்...
10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

10 அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம் 0

🕔28.Dec 2015

அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறியமுடிகிறது. இந்த மாற்றங்கள் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்படலாமெனக் கூறப்படுகிறது. அந்தவகையில், பத்து அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரவி கருணாநாயக்கவிடமுள்ள நிதியமைச்சு, கபீர் ஹாசீமுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ரவி கருணாநாயக்கவுக்கு வர்த்தக அமைச்சுப் பதவி வழங்கப்படலாமெனவும் நம்பப்பபடுகிறது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு மேலும் பல பொறுப்புகள்

மேலும்...
லொறி மோதி, 31 வயது பெண் பலி

லொறி மோதி, 31 வயது பெண் பலி 0

🕔28.Dec 2015

– க. கிஷாந்தன் – கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் வரதராஜ் சந்திரகலா (வயது 31) எனும் பெண், சம்பவ இடத்திலேயே பலியானார். மேற்படி பெண், பாதையைக் கடக்க முற்பட்ட வேளையில், நுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறியில் மோதுண்டு பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா

மேலும்...
அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று

அமைச்சர் றிசாத் – ஆனந்தசாகர தேரர்; மோதல் இன்று 0

🕔28.Dec 2015

அமைச்சர் றிசாத் பதியுத்தீன் –  பஹியங்கல ஆனந்தசாகர தேரர், இன்று இன்று திங்கட்கிழமை ஹிரு தொலைக்காட்சியின் ‘சலகுன’ எனும் நேரடி விவாத நிகழ்சியில் மோதிக் கொள்கின்றனர். வில்பத்து பகுதியில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, மேலும் பல சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாக, பஹியங்கல ஆனந்தசாகர தேரர் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்த அமைச்சர்

மேலும்...
ஜனாதிபதியின் உத்தரவில், பறிபோகிறது ஹிருணிகாவின் வீடு

ஜனாதிபதியின் உத்தரவில், பறிபோகிறது ஹிருணிகாவின் வீடு 0

🕔27.Dec 2015

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் குடும்பத்துக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டினை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹிருணிகாவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொல்லப்பட்டதையடுத்து, அவரின் குடும்பத்தினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக இருந்த ஹிருணிக்காவின் தந்தையான, பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர, கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ…

பத்திரிகைக்காரங்களா நீங்க? த்தூ… 0

🕔27.Dec 2015

தென்னிந்திய நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த், இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மிகவும் அநாகரீகமாக ஊடகவியலாளர்களைப் பேசியமையானது, பல்வேறு விமனர்சனங்களையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சியான தே.மு.தி.க. சார்பில் இன்று சனிக்கிழமை ரத்ததான முகாமொன்று இடம்பெற்றது. இந்த முகாமைத் தொடக்கி வைத்த விஜயகாந்த், பின்னர் ஊடகவியலாளர்களையும் சந்தித்தார். அப்போது விஜயகாந்திடம், 2016ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில்

மேலும்...
பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம்

பள்ளிவாசல் சுற்று வேலி; இனந்தெரியாதவர்களால் சேதம் 0

🕔27.Dec 2015

– எம்.எம். ஜபீர் –அம்பாறை மாவட்டம் 06ஆம் கொலனி, சொறிக்கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள அல் -மஸ்ஜிதுல் ரௌழா பள்ளிவாசலின் சுற்று வேலி, நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜூம்மா பள்ளிவால் தலைவர் எம்.எச்.அபூபக்கர் தெரிவித்தார்.இப்பள்ளிவாசல் 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எனவே, பழைய பள்ளிவாசலை உடைத்து

மேலும்...
கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது

கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது 0

🕔27.Dec 2015

– ஜௌஸி அப்துல் ஜப்பார் – (சட்டென மனசில் பட்டவை)  மக்கள் பாவனைக்காக மூடிவைக்கப்பட்டுமாடுகள் பாவிக்க திறக்கப்பட்டுள்ளது?? பாழ்வளவைக் கட்டவா பம்மாத்து அத்தனை. அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா. “சிறப்பா ஞாபகப்படுத்திட்டிங்க”. திறந்தீங்க பிறகு திரும்பியும் பார்க்கவில்லை. கட்டக்கட்ட ஏன் உடைக்கிறார்கள்?மின்விளக்குகள் யாருக்குத் தொல்லை? கழிவறை மூடியிருக்கிறது “திறந்த” நாளிலிருந்து.கட்டியம்கூறுவது “இத்தால் அறிந்துகொள்க:“பெயரெடுக்க கட்டப்பட்டுள்ளது பாவனைக்காக அல்ல” இத்தனை

மேலும்...
உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம்

உள்ளுராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு, உட்கட்சி பிரச்சினைதான் காரணமாம் 0

🕔26.Dec 2015

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்பிரச்சினை காரணமாகவே உள்ளுராட்சி சபை தேர்தல்களை அரசாங்கம் 06 மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.சுதந்திரக் கட்சியின் உட்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமையினைஅடுத்தே, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை ஜனாதிபதி பிற்போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை செய்து வருகின்றனர்.இந்த நிலைவரமானது, கட்சியில் பிளவினை

மேலும்...
தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி

தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி 0

🕔26.Dec 2015

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முற்பட்டார் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த அதிகாரியொருவர், கெப்டன் திஸ்ஸ என்பவருக்கு துணையாக இருந்து வருகின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.முன்னாள்

மேலும்...
பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம்

பொத்துவில் பிரதேசத்துக்கு முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த ஆறு மாதங்களுள் வழங்கப்படும்; அமைச்சர் ஹக்கீம் 0

🕔26.Dec 2015

– மப்றூக் –பொத்துவில் பிரதேசத்துக்குரிய முழுமையான குடிநீர் விநியோகம், அடுத்த 06 மாத காலத்தினுள் வழங்கப்படும் என்று – நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் குடிநீரினை வழங்கும்பொருட்டு, நீர்த் தேக்கமொன்றினை உருவாக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய நீர்வழங்கல்

மேலும்...
23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் நீடிப்பு

23 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள் நீடிப்பு 0

🕔26.Dec 2015

உள்ளுராட்சி சபைகள் சிலவற்றின் பதவிக் காலம், 06 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி மற்றம் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.எதிர்வரும் 2015 டிசம்பர் 31ஆம் திகதியுடன் பதவிக் காலம் பூர்த்தியாகின்ற, 23 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் ஆலோசனைக்கிணங்க   மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.மாநகர சபைகள் மற்றும்

மேலும்...
பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி

பாலமுனையில் நூல் வெளியீடு; அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதி 0

🕔25.Dec 2015

– றியாஸ் ஆதம் –பாலமுனையைச் சேர்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் பஸ்மில் ஏ. கபூர் எழுதிய ‘இரண்டாம் உயிர்’ கவிதை நூல் வெளியீடும், கவிஞர் கௌரவிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. டொக்டர் எஸ்.எம். றிபாஸ்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம்

மேலும்...
வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ

வானிலை அறிவிப்பாளராக கலக்கும் ரோபோ 0

🕔25.Dec 2015

சீனாவிலுள்ள ‘ஷாங்காய் ட்ராகன் டிவி’ எனும் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்று, தன்னுடைய வானிலை அறிவிப்பாளராக, செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோவொன்றினை நியமித்துள்ளது. காலை நேர செய்தியின் போது, திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றிய குறித்த ரோபோ, “குளிர்கால பருவத்தில் என் புதிய வேலை தொடங்குவதில் நாம் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று கூறியது. மேற்படி செய்திச் சேவையின் ரோபோவுக்கு ‘ஜியோஐஎஸ்’ என்று பெயர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்