Back to homepage

பிரதான செய்திகள்

சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர்  றிசாத்

சிறுபான்மையினரை பெரும்பான்மையினர் அரவணைப்பதனூடாகவே, சமாதானத்தை அடைய முடியும்: அமைச்சர் றிசாத் 0

🕔26.Sep 2016

– சுஐப்.எம். காசிம் – ஒரு பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழுகின்ற மக்கள், அங்குள்ள சிறுபான்மை மக்களை அணைவனைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் உண்மையான சமாதானத்தை அடை முடியும் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மேற்சொன்ன விடயத்தினை சிங்களவர், தமிழர்கள் மட்டுமன்றி, முஸ்லிம்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மன்னார் முசலிப்பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர்

மேலும்...
நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு

நீதிமன்றில் ஆஜராகுமாறு, திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு உத்தரவு 0

🕔26.Sep 2016

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்ட போலி ஆவணமொன்றை தயாரித்து வெளியிட்டமை தொடர்பாகவே திஸ்ஸ

மேலும்...
மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை

மயானங்களுக்கு அருகில், பேச்சுவார்த்தை நடத்தினோம்: மஹிந்தவின் கண்களில் மண் தூவிய கதை 0

🕔25.Sep 2016

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் கொண்டு வரும் பொருட்டு, வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலான போராடத்தினை தான் எதிர்கொண்டதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாகனங்களை மயானங்களுக்கு அருகில் நிறுத்தி விட்டு, முக்கியஸ்தர்களுடனான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம் 0

🕔25.Sep 2016

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் சுமார் 100 மில்லியன் (10கோடி) நிதியில், வைத்தியசாலையின் மேற்படி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன.

மேலும்...
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்: பாடசாலைச் சீருடையில் கலக்கும் சனத் ஜயசூரிய 0

🕔25.Sep 2016

நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் பிரதியமைச்சருமான சனத் ஜயசூரிய, பாடசாலைச் சீருடை அணிந்தவாறு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜயசூரிய கல்வி கற்ற மாத்தறை புனித சர்வேசஸ் கல்லூரியில், பழைய மாணவர்களுக்கான நிகழ்வொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்து கொள்ளச் சென்றபோது, சனத் ஜயசூரிய, வெள்ளை நிற சேட் மற்றும், நீல

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது 0

🕔25.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர். கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது. ஆயினும், அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர். மேற்படி சந்தர்ப்பத்தின்போது, அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார் என தெரியவந்துள்ளது.

மேலும்...
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன?

பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, மு.கா. தவிசாளர் பசீர் எழுதிய கடிதத்தில் மறைக்கப்பட்ட விவகாரம் என்ன? 0

🕔24.Sep 2016

– றிசாத் ஏ காதர் – முகாங்கிரசின் உயர்பீடக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து, அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சிக்கு கடிதமொன்றினை எழுதியதாகத் தெரியவருகிறது. மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் கடந்த செவ்வாய்கிழமை, அந்தக் கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதும், அதில் தவிசாளர் பசீர் மற்றும் செயலாளர் ஹசன் அலி

மேலும்...
சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார்

சிராந்தியுடன் மஹிந்த, நுவரெலியாவில் நடைபோட்டார் 0

🕔24.Sep 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரின் துணைவியார் சிராந்தியுடன் இன்று சனிக்கிழமை நுவரெலியாவில் வலம் வந்தார். இதன்போது, அவருடன் பொதுமக்கள் அளவளாவியதோடு, இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். நுவரெலியாவுக்கு நேற்றைய தினம் வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று காலை கிரகரி வாவியைச் சுற்றி நடைப் பயிற்சியில் ஈடுபட்டபோதே பொதுமக்கள் அவருடன் அளவளாவிக் கொண்டனர். மஹிந்த ராஜபக்ஷவும்,

மேலும்...
ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார்

ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார் 0

🕔24.Sep 2016

– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை ஆராயும் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ செயல்திட்டத்தின்போது,  இப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம்

மேலும்...
வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம்

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 05 பேர் பலி: அமெரிக்காவில் சம்பவம் 0

🕔24.Sep 2016

அமெரிக்காவின் வொஷிங்டன் மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 05 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது. உயிரிழந்தவர்களில் நான்கு பெண்களும், ஒரு ஆணும் அடங்குகின்றனர். தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக, வாஷிங்டன் பொலிஸ் அதிகாரி மார்க் ஃப்ரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தத் தாக்குதலை ஒருவர் மட்டுமே மேற்கொண்டிப்பதாக நம்பப்படுகிறது. மேலும், தாக்குதல்தாரி ஸ்பானிஷ்

மேலும்...
ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் 0

🕔24.Sep 2016

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று வெள்ளிக்கிழமைபொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்த கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஏறாவூரில்

மேலும்...
சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சிகை அலங்காரத் தொழிலாளியை தாக்கிய, பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 0

🕔24.Sep 2016

– க. கிஷாந்தன் – பொலிஸ் அதிகாரியொருவர், சிகையலங்காரத் தொழிலாளி ஒருவரை, ஹட்டன் நகரில் தாக்கியமையினைக் கண்டித்து, இன்று சனிக்கிழமை பகல், ஹட்டன் நகரில் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை, குறித்த ஊழிர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. “மலையக தமிழ் இளைஞர்களுக்கு எதிராக பொலிஸார் அரங்கேற்றும் அடிதடி அராஜகத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க

மேலும்...
இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய

இந்த வருடம், தேர்தல் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய 0

🕔24.Sep 2016

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; எல்லை நிர்ணய செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், எல்லை நிர்ணய செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி

மேலும்...
சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு

சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகள் பேஸ்புக் பயன்படுத்துவதாக, ஹிருணிகா குற்றச்சாட்டு 0

🕔23.Sep 2016

தன்னுடைய தந்தையின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள இருவரின் பேஸ்புக் பக்கங்கள் செயற்படுத்தப்படுதாகக் குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, அது எவ்வாறு முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். சிறையிலிருக்கும் ஒருவர் எவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தை இயக்க முடியும் என்று, ஹிருணிகா தனது பேஸ்புக் பக்கத்தினூடாக வினவியுள்ளார். மடிக் கணிணியோ, கைத்தொலைபேசிகளோ

மேலும்...
47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு

47 மருந்துப் பொருட்களுக்கு, விலை குறைப்பு 0

🕔23.Sep 2016

அத்தியவசியமான 47 மருந்துப் பொருட்களின் விலைகள், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இவற்றில் நீரிழிவு மற்றும் இருதய நோய்களுக்காகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் உள்ளடங்குகின்றன. தேசிய மருந்துகள் கொள்கையின் முதலாம் கட்ட நடவடிக்கையாக, இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்