Back to homepage

பிரதான செய்திகள்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம் 0

🕔23.Apr 2024

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு – பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக இவ்வருடம் மார்ச் மாதம் 02 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம்

ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம் 0

🕔23.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தரகுப் பணத்துக்காக அரசாங்கத்திடம் இருந்து மதுபான கடைகளின் உரிமங்களை – தங்கள் கூட்டாளிகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும்

மேலும்...
காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கல்முனை கல்வி வலயம் 31 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை அன்பளிப்பு

காஸா சிறுவர்கள் நிதியத்துக்கு கல்முனை கல்வி வலயம் 31 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகை அன்பளிப்பு 0

🕔22.Apr 2024

– பாறுக் ஷிஹான் – யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா சிறுவர்களுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியத்துக்கு, 31 லட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா நிதியை, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் இன்று (22) கையளித்தது. வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீமிடம் – கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் மேற்படி

மேலும்...
கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Apr 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) உத்தரவிட்டுள்ளார். போலியான இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெஹலிய – தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மே 06ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மேலும்...
பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம்

பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம் 0

🕔22.Apr 2024

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் – மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக, வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக – ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது. அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே

மேலும்...
வேண்டுகோளை கவனத்திற் கொண்டமைக்கு இம்ரான் எம்.பி, பரீட்சைகள் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பு

வேண்டுகோளை கவனத்திற் கொண்டமைக்கு இம்ரான் எம்.பி, பரீட்சைகள் ஆணையாளருக்கு நன்றி தெரிவிப்பு 0

🕔22.Apr 2024

தன்னுடைய வேண்டுகோளை கவனத்திற் கொண்டு – திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை, அந்த மாவட்டத்திலேயே நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள – பரீட்சை ஆணையாளருக்கு, திருகோணமலை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நன்றி தெரிவித்துள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரை – பரீட்சை தொடர்பான

மேலும்...
71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல்

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல் 0

🕔22.Apr 2024

கடந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் இன்று (22) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த பெரும் போகத்தில் நாட்டில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 68,131 ஹெக்டேயரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற

மேலும்...
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி 0

🕔22.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்றுள்ள – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா

மேலும்...
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ராஜிநாமா

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ராஜிநாமா 0

🕔22.Apr 2024

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே – அவரின் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி செயலகத்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி அவரின் பதவியிலிருந்து விலகுவதாக வில்லி கமகே, அவரின் ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் லக்ஷ்மன்

மேலும்...
கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம்

கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம் 0

🕔21.Apr 2024

கார் பந்தயமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தியத்தலாவையில் இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ எனும் கார் பந்தயத்திலேயே இந்த துயரம் ஏற்பட்டுள்ளது. பந்தயத்தில் ஓடிய கார், பாதையை விட்டு விலகி – ஆட்களை

மேலும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத வளர்ச்சி குறித்து, இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தகவல் 0

🕔21.Apr 2024

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ, விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். வெலிமடை – அம்பகஸ்தோவ பொது

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து 0

🕔21.Apr 2024

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – மீனவர்களை சந்திக்கவுள்ள கூட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (21) மாலை 4.00 மணியளவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா உதவவுள்ளதாகவும், அது தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரை மு.காங்கிரஸ் தரப்பு அழைத்து வரவுள்ளதாவும், அதுபற்றி மீனவ சமூகத்தினருடன் பேசுவதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்

மேலும்...
இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு 0

🕔21.Apr 2024

இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவ மக்கள், இந்தியாவிலுள்ள ஐந்து பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை இவர்கள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட

மேலும்...
விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம்

விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம் 0

🕔21.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (21) இடம்பெற்ற போது – இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது

பிரித்தானிய பெண்ணும், நுவரெலியா ஆணும் போதைப் பொருள்களுடன் கைது 0

🕔20.Apr 2024

குஷ் மற்றும் ஹஷிஸ் ஆகிய போதைப் பொருள்களை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர், நுவரெலியா – டொப்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் பயணித்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பிரித்தானியப் பெண்ணிடம் இருந்து 18 கிராம் 920 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளையும்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்