பெற்றோல் டேங்கர் விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகி, 140 பேர் பலி: பாகிஸ்தானில் சோகம் 0
பெற்றோல் ஏற்றிக் கொண்டு பயணித்த டேங்கர் புரண்டு விபத்துக்குள்ளான போது ஏற்பட்ட தீயில் சிக்கி, ஆகக்குறைந்தது 140 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பாகிஸ்தானில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றது. குறித்த டேங்கர், கராச்சியிலிருந்து லாஹுருக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. டேங்கர் புரண்டபோது, அதிலிருந்து வெளியேறிய பெற்றோலை சேகரிப்பதற்காக கூடியவர்களே