Back to homepage

வெளிநாடு

இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்:  இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு

இஸ்லாத்தை ஏற்கும் 3000 இந்துக்கள்: இந்தியா கோவை மாவட்டத்தில் பாரபட்சம் காரணமாக ஏற்பட்ட முடிவு 0

🕔25.Dec 2019

இந்தியாவின் தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் தலித் மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் காரணமாக, அங்குள்ள 3000 தலித்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாறத் திட்டமிட்டுள்ளதாக தலித் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. எனினும், அவர்களின் பெயர்கள் மற்றும் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், நடூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் தனியார் சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில்

மேலும்...
கிறிஸ்மஸ் வாழ்த்துத் தொடர்பில் சாகிர் நாயக் தெரிவித்த கருத்து தொடர்பில் சர்ச்சை

கிறிஸ்மஸ் வாழ்த்துத் தொடர்பில் சாகிர் நாயக் தெரிவித்த கருத்து தொடர்பில் சர்ச்சை 0

🕔21.Dec 2019

இஸ்லாமியர்கள் எவரும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக் தெரிவித்திருந்த கருத்தை மையப்படுத்தி புது சர்ச்சை வெடித்துள்ளது. “எனதருமை இஸ்லாமியர்களே, தயவு செய்து கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதை தவிர்த்திடுங்கள். அது மிகப்பெரிய பாவச்செயல். கிறிஸ்துமஸ் இஸ்லாத்துக்கு எதிரானது. இந்தச் செய்தியை நீங்களும் மறுபதிவிட்டு

மேலும்...
பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை

பெண் வைத்தியர் பாலியல் வல்லுறவு : குற்றம் சாட்டப்பட்ட 04 பேர், பொலிஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொலை 0

🕔6.Dec 2019

இந்தியா – ஹைதராபாத் நகரில் பெண் கால்நடை வைத்தியர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேர், பொலிஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு அவர்கள் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு நடந்தவற்றை கூறும்படி கேட்டபோது பொலிஸாரை தாக்க முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என, பெயர்

மேலும்...
ஊடக விவாதத்தில் பயன்படுத்திய தவறான வார்த்தைக்காக மன்னிப்புக் கோரிய பிரபலம்: குவிகிறது பாராட்டு

ஊடக விவாதத்தில் பயன்படுத்திய தவறான வார்த்தைக்காக மன்னிப்புக் கோரிய பிரபலம்: குவிகிறது பாராட்டு 0

🕔27.Nov 2019

ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் தவறான வார்த்தையைச் பயன்படுத்தியமைக்காக மலையாள நடிகை பார்வதி பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளமை, பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. மலையாள நடிகை பார்வதி சமீபத்தில் இந்தியாவின் முக்கிய நடிகர்கள் கலந்துகொண்ட விவாத சினிமா நிகழ்வு ஒன்றில் கலந்துரையாடினார். அந்த நிகழ்வில் ‘அர்ஜுன் ரெட்டி’ எனும் திரைப்படம் பெண்களுக்கு எதிரான பாலின வெறுப்புக் காட்சிகளைக் காட்டுவது

மேலும்...
ஹிட்லரின் தொப்பியை ஏலத்தில் எடுத்த அப்துல்லா: இஸ்ரேல் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார்

ஹிட்லரின் தொப்பியை ஏலத்தில் எடுத்த அப்துல்லா: இஸ்ரேல் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கினார் 0

🕔26.Nov 2019

சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் லெபனான் வணிகர் ஒருவர், ஹிட்லரின் தொப்பி உள்ளிட்ட பத்து பொருட்களை ஜெர்மனியில் நடந்த சர்ச்சைக்குரிய ஏலத்தில் எடுத்துள்ளார். நாஜி ஆதரவாளர்கள் கரங்களில் இந்தப் பொருட்கள் சிக்கிவிடக் கூடாது என்ற காரணத்துக்காக, இதனை ஏலத்தில் எடுத்ததாகக் கூறும் அப்துல்லா என்ற இந்த வணிகர், இதனை இஸ்ரேலுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். சுவிட்ஸர்லாந்தின்

மேலும்...
40 வருடங்களாக மண் சாப்பிட்டு வாழும் மூதாட்டி: என்ன சொல்கிறார்கள் வைத்தியர்கள்

40 வருடங்களாக மண் சாப்பிட்டு வாழும் மூதாட்டி: என்ன சொல்கிறார்கள் வைத்தியர்கள் 0

🕔24.Nov 2019

இந்தியாவின் தூத்துக்குடி அருகே உள்ள ஒரு மூதாட்டி மண் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஆரோக்கியத்துடன் கம்பீரமாக உலா வரும் அவரை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகேயுள்ள சூசைநகரில் மரியசெல்வம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். அவருக்கு வயது 85. இவரின் கணவர் சுந்தரம், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மேலும்...
பூகன்வில்: உலகின் புதிய நாடாக மாறுமா?

பூகன்வில்: உலகின் புதிய நாடாக மாறுமா? 0

🕔21.Nov 2019

பல தீவுகளின் தொகுப்பாக உள்ள பப்புவா நியூ கினியின் ஓர் அங்கமாக உள்ள பூகன்வில் (Bougainville) எனும் தீவுக்கூட்டம் சுதந்திரமான தனி நாடாக வேண்டுமா என்பது குறித்த மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இப்போது பப்புவா நியூ கினியின் ஒரு மாகாணமாக பூகன்வில் உள்ளது. சுதந்திரமான தனி நாடாக மக்கள் வாக்களித்தால் இந்த தீவுக்கூட்டம் உலகின்

மேலும்...
பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவு

பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கு சொந்தமானது; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முஸ்லிம்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உத்தரவு 0

🕔9.Nov 2019

இந்தியா அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராம் லல்லாவுக்கு (குழந்தை வடிவ ராமர்) இந்த சர்ச்சைக்குரிய இடம் இனி உரித்தானதாகும். மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள்

மேலும்...
பாபர் மசூதி அமைவிடம் யாருக்கு சொந்தம்: மேன்முறையீட்டு வழக்குத் தீர்ப்பு, இன்று வெளியாகிறது

பாபர் மசூதி அமைவிடம் யாருக்கு சொந்தம்: மேன்முறையீட்டு வழக்குத் தீர்ப்பு, இன்று வெளியாகிறது 0

🕔9.Nov 2019

இந்தியாவின் அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று இந்துக்கள் அழைக்கும் இடமான, பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று இன்று சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி – பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார்

மேலும்...
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார்

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் பக்தாதி, அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் 0

🕔27.Oct 2019

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கப்படைகள் நடத்திய தாக்குதலில் இவர் கொல்லப்பட்டுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். சிரியாவின் வடமேல் மாகாணமான இத்லிப் இல், அல் பக்தாதி மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலை அடுத்து, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் விசேட

மேலும்...
பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

பண்டைய சவப்பெட்டிகள், எகிப்தில் கண்டுபிடிப்பு: மன்னர்களின் விவரங்களைஅறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 0

🕔21.Oct 2019

எகிப்தின் லக்சார் நகருக்கு அருகே மரத்தாலான 20 சவப்பெட்டிகளை அகழ்வாராய்ச்சி குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. இதனை அந்நாட்டின் தொல்பொருள் அமைச்சும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த சவப்பெட்டிகளின்மீது பூசப்பட்ட வண்ணம் இன்றும் தெரிகிறது. இந்த பெட்டிகள் நைல் நதியின் மேற்கு கரையில் இருக்கும் தீபன் நெக்ரொபொலிஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி பெட்டிகள் – ஒன்றின் மீது ஒன்றாக இரண்டு அடுக்குகள்

மேலும்...
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம்

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 62 பேர் பலி; தொழுகை நேரத்தில் பரிதாபம் 0

🕔18.Oct 2019

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமை மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில், பள்ளிவாசலின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை

மேலும்...
சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம்

சிரியா மீதான துருக்கி தாக்குதலில் பல லட்சம் பேர் பாதிப்பு: குர்து படையின் முதுகில் அமெரிக்கா குத்தி விட்டதாக விசனம் 0

🕔12.Oct 2019

வடக்கு சிரியா மீது துருக்கி மேற்கொண்டுள்ள தாக்குதலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி உள்ளதாக ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது. குர்து ஆயுதப் படையான சிரியா ஜனநாயகப் படையின் கட்டுப்பாட்டில் வடக்கு சிரியா உள்ளது. அல் ஹசாக்கா மற்றும் டெல் டெமர் நகரத்தில் பலர் பள்ளிகளில் தஞ்சம் புகுந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி

மேலும்...
சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம்

சிம்பாவேயின் முதல் ஜனாதிபதி முகாபே மரணம் 0

🕔6.Sep 2019

சிம்பாவேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே தனது 95வது வயதில் இன்று மரணமடைந்தார். சிம்பாவேயின் விடுதலைக்கு பின் அந்நாட்டின் ஆட்சிக்கு வந்த முதல் தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். 1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (சிம்பாவேயின்

மேலும்...
சாகிர் நாயக்கின் சர்ச்கைக்குரிய பேச்சு: எல்லை மீறி விட்டதாக மலேசிய பிரதமர் மஹதீர் தெரிவிப்பு

சாகிர் நாயக்கின் சர்ச்கைக்குரிய பேச்சு: எல்லை மீறி விட்டதாக மலேசிய பிரதமர் மஹதீர் தெரிவிப்பு 0

🕔18.Aug 2019

சாகிர் நாயக் இனவாத அரசியல் குறித்துப் பேசியது தவறு என்று மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமத் தெரிவித்துள்ளார். அதேவேளையில் மலேசியாவில் இஸ்லாம் குறித்துப் பேசவும் போதிக்கவும் சாகிருக்கு எந்தத் தடையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தி உள்ளார். இனவாத அரசியல் குறித்துப் பேசுவது மலேசியாவில் நிலவும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இனவாத

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்