Back to homepage

மேல் மாகாணம்

அலி சப்ரி ரஹீம் எம்.பியை மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

அலி சப்ரி ரஹீம் எம்.பியை மக்கள் காங்கிரஸில் இருந்து நீக்க இடைக்காலத் தடை 0

🕔7.Mar 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை, வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்குவதற்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. தமது கட்சி உறுப்புரிமையை நீக்கி அதன்மூலம் நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு

மேலும்...
465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை

465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை 0

🕔7.Mar 2024

சுமார் 465 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமை தொடர்பில் ஆராயுமாறு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அண்மையில் 60,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் தவறுகளால் 465 பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்காமல் போனதாக அவர் கூறினார். இந்த

மேலும்...
சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு 0

🕔7.Mar 2024

இலங்கைக்கு சவூதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் – இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரிடமிருந்து 50 டொன் பேரிச்சம்பழங்கள் அன்பளிப்பாக கிடைத்துள்ளன. முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் தலைமையகத்தில்நேற்று (06) நடைபெற்ற வைபவத்தின் போது, சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, இலங்கை அதிகாரிகளிடம் இந்த

மேலும்...
பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு

பூவில் தேன் எடுக்கும் விதங்கள்: நாடாளுமன்றில் ஜனாபதி விபரிப்பு 0

🕔6.Mar 2024

அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அந்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே

மேலும்...
‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் தலைப்பில், கோட்டாவின் புத்தகம் நாளை வெளியாகிறது

‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ எனும் தலைப்பில், கோட்டாவின் புத்தகம் நாளை வெளியாகிறது 0

🕔6.Mar 2024

‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ என்ற தலைப்பில் எனது புத்தகம் வெளியிடப்படுவதை அறிவிக்க விரும்புகிறேன். 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்றதில் இருந்து – வெளிநாட்டுத் தலையீடுகள் இலங்கையின் மீது பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 2019 நொவம்பரில் நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, சில வெளிநாட்டு

மேலும்...
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் –  ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதி சந்திப்பு; திருகோணமலை எம்.பிகளுக்கு அழைப்பில்லை 0

🕔6.Mar 2024

(யூ.எல். மப்றூக், பட உதவி: நூறுல் ஹுதா உமர்) அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிகளுக்களை இன்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார். முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம்,

மேலும்...
தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம்

தங்கம் கடத்திய விவகாரம்: நாடாளுமன்றத்திலிருந்து ஒரு மாதம் அலி சப்ரி ரஹீம் இடைநிறுத்தம் 0

🕔6.Mar 2024

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் நாடாளுமன்ற வருகை இன்று (06) தொடக்கம் – ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷவினால் 2024 ஜனவரி 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில்

மேலும்...
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் 0

🕔5.Mar 2024

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, 2023 ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்

மேலும்...
அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல்

அரச அதிகாரிகளை எம்.பிகள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு: தவிர்க்குமாறும் அறிவுறுத்தல் 0

🕔5.Mar 2024

உயர் பதவிகளை வகிக்கும் அரச அதிகாரிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கும் போக்கு அதிகரித்து வருவது தொடர்பில் எழுந்துள்ள கவலைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கு – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய சபாநாயகர்; உயர் பதவிகளை வகிக்கும் அரச உத்தியோகத்தர்களை எந்தவித அடிப்படையும் இன்றியும், பல்வேறு சந்தர்ப்பங்களில்

மேலும்...
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு 0

🕔5.Mar 2024

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் இன்று (05) கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ரோஹினி குமாரி விஜேரத்ன, ஹேஷா விதானகே, மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்.எம்.

மேலும்...
எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு

எம்.பியாகும் எண்ணம் இல்லை: நாடு திரும்பிய பசில் தெரிவிப்பு 0

🕔5.Mar 2024

பொதுஜன பெரமுன கட்சி – ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இன்று (05) காலை வந்திறங்கிய நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரும் எண்ணம் தனக்கு இல்லை என்றும்,

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம்

நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம் 0

🕔5.Mar 2024

புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன, நாடாளுமன்ற நியமனத்திற்கு தகுதி பெற்றிருந்தார். 71

மேலும்...
பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

பொலிஸார் இருவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு 0

🕔4.Mar 2024

பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸாருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (04) மரண தண்டனை விதித்துள்ளது. பேலியகொட பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் பொலிஸ் கொஸ்டபில் ஒருவருக்குமே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில்

மேலும்...
எரிபொருள்களுக்கான விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம்

எரிபொருள்களுக்கான விலைகளில் நள்ளிரவு முதல் மாற்றம் 0

🕔4.Mar 2024

எரிபொருள் விலையில் இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 09 ரூபாயிவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 447 ரூபாவாக

மேலும்...
மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது 0

🕔4.Mar 2024

மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், மொத்த கட்டணக் குறைப்பு 21.9 சதவீதமாகும். 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்