Back to homepage

மேல் மாகாணம்

மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி

மரண வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்றவர், விபத்தில் பலி 0

🕔29.Mar 2017

– க. கிஷாந்தன் – உடப்புஸ்ஸல்லாவ – ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகிய முச்சக்கர வண்டியொன்று, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. ரப்பான தோட்ட மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த போதே, இந்த விபத்து நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கர வண்டியில்

மேலும்...
மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர்

மறைக்கப்பட்ட மர்மங்கள் புத்தகத்துடனான தொடர்பினை, விசாரணையில் மறுத்தார் பஷீர் 0

🕔29.Mar 2017

தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தக வெளீட்டுடன், தன்னைத் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுக்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பஷீர் சேகுதாவூத் மறுத்துள்ளார். ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு  -விசாரணையொன்றினை நேற்று செவ்வாய்கிழமை நடத்தியதாகத் தெரியவருகிறது. தாருஸ்ஸலாம்: மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் புத்தகம் தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி

விமலுக்கு ஆபத்து; தேசிய வைத்தியசாலையில் அனுமதி 0

🕔29.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உடல்நிலை மோசமடைந்துள்ளமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விமல் வீரவன்ச, சிலைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, இவ்வாறு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாதம் 22 ஆம் திகதி, விமல் வீரவன்ச உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். இந்த

மேலும்...
மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி

மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ஊடகவியலாளர் மப்றூக்; ஹக்கீமுக்கு ஏற்பட்டுள்ள பாரிய தலைவலி 0

🕔29.Mar 2017

– நவாஸ் – முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து எழுதுகின்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு, அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஒருவர்தான் முக்கிய தகவல்களை வழங்குவதாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில் குற்றம் சுமத்தினார். கட்சியின் முக்கிய கூட்டங்கள் நடைபெறும்போது, குறித்த ஊடகவியலாளருக்கு சம்பந்தப்பட்ட உயர்பீட உறுப்பினர் தனது கைத்தொலைபேசியிலிருந்து அழைப்பெடுத்து,

மேலும்...
மு.கா. தவிசாளராக  முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம்

மு.கா. தவிசாளராக முழக்கம் மஜீத் தெரிவு; சபையில் இல்லாமலேயே அடித்தது யோகம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – மு.காங்கிரசின் புதிய தவிசாளராக, அந்தக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவர் பதவியை வகித்த ‘முழக்கம் மஜீத்’ என அழைக்கப்படும் ஏ.எல். அப்துல் மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மு.கா.வின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போதே, அவரை தவிசாளராக உயர்பீடம் தெரிவு செய்தது. உயர்பீடக் கூட்டத்துக்கு முழக்கம் மஜீத் வருகை தராத

மேலும்...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 03 மாணவர்கள், அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி 0

🕔29.Mar 2017

இம்முறை வெளியான கல்வி பொதுதராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மூன்று மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தரச் சித்தி பெற்றுள்ளனர். இதேவேளை, இப்பரீட்சையில் தோற்றிய மாணவர்களிள் 98% சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பொதுதராதரப் பத்திர உயர்தர பிரிவில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இம்முறை

மேலும்...
மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம்

மு.கா.வின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து அன்சில் நீக்கம் 0

🕔29.Mar 2017

– அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் மற்றும் பாலமுனை அமைப்பாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி எம்.ஏ. அன்சில் நீக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மு.காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, கட்சியின் தலைமையகம் தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதன்போதே, மேற்படி பதவிகளிலிருந்து அன்சிலை நீக்குவதாக, கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் அறிவித்தார். மு.காங்கிரசின் தலைவர் செய்ததாகக்

மேலும்...
வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட்  கோரிக்கை

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல்; முசலி மக்களுக்கு பாரிய பாதிப்பு: ரத்துச் செய்யுமாறு ரிஷாட் கோரிக்கை 0

🕔28.Mar 2017

வில்பத்துத் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல், முசலிப் பிரதேச மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். கால் நூற்றாண்டு கால அகதி வாழ்வில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து விட்டு,

மேலும்...
தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம்

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை; ஜனாதிபதி திட்டவட்டம் 0

🕔28.Mar 2017

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரர் என்ற வகையில், தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் தான் தயாரில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழகமை இரவு நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் இதன்பொது நீண்டநேர கலந்துரையாடல்

மேலும்...
மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு

மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கு; விமல் ஆஜராகாமையினால் ஒத்திவைப்பு 0

🕔27.Mar 2017

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிரான வழக்கில், பிரதான சாட்சிகளில் ஒருவரான விமல் வீரவன்ச, இன்று திங்கட்கிழமை ஆஜராகமையினால், குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில், உயர்கல்வி பிரதியமைச்சராக பதவி வகித்த மயோன் முஸ்தபா, 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அரசாங்கத்தை விட்டும் விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் இணைந்தார்.

மேலும்...
உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்; நினைவுக் கருத்தரங்கு

உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்; நினைவுக் கருத்தரங்கு 0

🕔26.Mar 2017

– அஷ்றப். ஏ சமத் –‘உவைஸ் வழியில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில், காலம் சென்ற பேராசிரியா் ம.மு. உவைஸ் அவா்களின் நினைவுக் கருத்தரங்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  கல்கிசையில்  உள்ள கற்கை நிலையத்தில் இடம்பெற்றது.கருத்தரங்கின் அங்குரார்பண நிகழ்வு தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம் பெற்றது. தென்கிகிழக்கு

மேலும்...
வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து

வில்பத்து வடக்கு வனப்பகுதிகளை, தனி வனமாக பிரகடனப்படுத்தும் அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையெழுத்து 0

🕔25.Mar 2017

வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்கேயுள்ள 05 வனப் பகுதிகள் இணைக்கப்பட்டு, தனியான வனமாக பிரகடனப்படுத்துவதற்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார். மேற்படி வனப் பகுதிகள், வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரியதெனக் கூறப்படுகிறது.இதற்கமைய, வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம் மற்றும் பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட

மேலும்...
உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்கள் குறித்து பேச, கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு 0

🕔25.Mar 2017

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள்மற்றும் பிரதிநிதிகளை எதிர்வரும் 29ஆம் திகதியன்று சந்தித்துப் பேசுவதற்கு தேர்தல்கள் ஆணையகம் அழைப்பு விடுத்துள்ளது. நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில், இந்தச் சந்திப்பின்போது பேசப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் போன்றவை குறித்தும், தேர்தல்கள்

மேலும்...
போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு

போதைக்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர்கள், மதுபான உற்பத்திக்கு அனுமதி வழங்கியுள்ளனர்: மஹிந்த குற்றச்சாட்டு 0

🕔25.Mar 2017

போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி, மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான அனுமதியினை வழங்கி, குடிப் பழக்கத்தினை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம் சாட்டினார். பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரான பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே, மேற்கண்ட விடயத்தினைக் கூறினார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்’;“இந்த நாட்டில் போதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக மார்தட்டிக்கொண்டு வந்த இவ்  அரசாங்கம், இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலமாக குடிப்பழக்கத்தை இந்த அரசாங்கம் ஊக்குவிக்கிறது.எமது காலத்தில் மாதுபான விற்பனை நிலையத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதாக விமர்சித்தவர்கள்,இன்று மதுபான உற்பத்தி தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கி உள்ளனர். நல்லாட்சி என்பது பேச்சில் மாத்திரமே

மேலும்...
உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாமைதான், டெங்கு தலைதூக்கக் காரணமாகும்: ஜோன்ஸ்டன் பெனாண்டோ 0

🕔24.Mar 2017

  உள்ளூராட்சி சபைகள் இயங்காமையினாலேயே, டெங்கு அபாயம் தலைதூக்கியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்தார். தற்போதைய அரசானது உள்ளூராட்சி மன்ற தேர்தலை இழுத்தடிப்புச் செய்து வருகிறது. இதன் காரணமாக உள்ளூராட்சி மன்றங்கள் ஊர்களை சுத்தமாக பேணுவதில் அசிரத்தையாக இருக்கின்றன. இதுவே இன்று டெங்கு அபாயம் தலைதூக்குவதற்கான மூல காரணம் என  அவர் விபரித்தார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்