Back to homepage

மேல் மாகாணம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம் 0

🕔29.Apr 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக்

மேலும்...
நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம்

நுரைச்சோலை மின் நிலையத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து, மக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பம் 0

🕔28.Apr 2017

நுரைச்சோலை நிலக்கரி மின்னிலையத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பில், அப்பிரதேசத்தில் வாழும் சமூகங்களுடன் இலங்கை மின்சாரத்துறையின் தொழினுட்ப, பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக, அந்த ஆணைக்குழு  தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையில் அனல் மின்சார உற்பத்தி

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம்: சம்பந்தனும் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

மாயக்கல்லி மலை விவகாரம்: சம்பந்தனும் ஹக்கீமும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு 0

🕔28.Apr 2017

– பிறவ்ஸ் –மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பில், உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான பரிகாரம் காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரா. சம்பந்தன் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக, அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவினர் அனுப்பி வைத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளனர்.இறக்காமம், மாணிக்கடு பிரதேசத்திலுள்ள மாயக்கல்லிமலை பிரதேசத்தில் நிலவிவரும்

மேலும்...
மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு

மாயக்கல்லி மலை விவகாரம், முஸ்லிம்களை வேண்டுமென்று சீண்டும் முயற்சி: ஜனாதிபதி செயலாளரிடம், அமைச்சர் றிசாத் எடுத்துரைப்பு 0

🕔27.Apr 2017

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. அபேகோனிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பி.பி அபேகோனை இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த அமைச்சர் ரிஷாட்

மேலும்...
ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

ராணுவ தளபதியாக பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேண்டியுள்ளார்: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0

🕔26.Apr 2017

அமைச்சர் பதவியை துறந்து விட்டு, ராணுவத் தளபதி அல்லது  அனைத்து படைகளின் தளபதி பதவியை இரண்டு வருடங்களுக்கு பொறுப்பேற்குமாறு, சரத் பொன்சேகாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று புதன்கிழமை தெரிவித்தார். நாட்டை ஒழுக்கப்படுத்துவதற்காகவே சரத் பொன்சேகாவிடம், ஜனாதிபதி இந்த வேண்டுகோளினை விடுத்ததாகவும் அமைச்சர் ராஜித மேலும்

மேலும்...
மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான்

மாவட்ட செயலாளரை பணிக்கும் அதிகாரத்தை, ஞானசாரருக்கு வழங்கியவர் யார்; அரசாங்கத்திடம் கேளுங்கள் என்கிறார் நபுஹான் 0

🕔26.Apr 2017

மாவட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளைகளைப் பிறப்பிக்கும்  அளவுக்கு, ஞானசார தேரருக்கு அதிகாரத்தை வழங்கியவர் யார் என்று, நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என, பாணந்துறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில்;ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் ‘டபள் ப்ரோமோஷன்’ வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான  ஞானசார தேரர், அவருடைய வேலையை

மேலும்...
வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு: அமைச்சர் றிசாத் பிரதம அதிதி 0

🕔26.Apr 2017

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக வசதிகள் உடன்பாடு தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு இன்று புதன்கிழமை காலை சினமன் கிரேண்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதில் பிரதம

மேலும்...
புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்புக்கான பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு; இந்த வருடத்தின் முதல் தேர்தல்: ராஜித தெரிவிப்பு 0

🕔26.Apr 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளும் வாக்கெடுப்பு இவ்வருடம் நடத்தப்படும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். நல்லாட்சி அரசாங்கம் 2017ஆம் ஆண்டு எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாக மேற்படி பொது

மேலும்...
வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர்

வில்பத்து செல்கிறார் ஹக்கீம்; நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைகின்றனர் 0

🕔25.Apr 2017

– பிறவ்ஸ் –அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் குழு 27ஆம் திகதி வியாழக்கிழமை வில்பத்து பிரதேசத்துக்கு விஜமொன்றை மேற்கொள்ளவுள்ளது. ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில், கடந்த 03ஆம் திகதி ஜனாதிபதி செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர், இவ்விஜயம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதி

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது

ஒலுவில் மீன்பிடி துறைமுகம் மூடப்படுகிறது: மஹிந்த திறந்ததை, நல்லாட்சி பறிக்கிறது 0

🕔25.Apr 2017

ஒலுவில் துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதன் மூலம், அந்தத் துறைமுகத்தை மூடவுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை நிருவகிப்பதற்கு ஏற்படும் தாங்க முடியாத செலவு காரணமாகவே, அந்தத் துறைமுகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த துறைமுகத்தை நிருவகிப்பதற்கான போதிய நிதி இல்லாமையினை அடுத்து, அமைச்சருக்கும்

மேலும்...
ஜானக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த: சு.கா. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம்

ஜானக பண்டார தென்னகோன், லொஹான் ரத்வத்த: சு.கா. தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் 0

🕔25.Apr 2017

முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவருமான ஜானக பண்டார தென்னகோன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஆகியோர், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தம்புள்ள தொகுதி அமைப்பாளராக ஜானக பண்டார தென்னகோனும், பாத்ததும்பர தொகுதி அமைப்பாளராக லொஹான் ரத்வத்தயும் செயற்பட்டு வந்தனர். இதேவேளை, ஜானக பண்டாரவின் இடத்துக்கு, தம்புள்ள

மேலும்...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனம்: பிரதியமைச்சர் பைசால் வழங்கினார் 0

🕔25.Apr 2017

– அஷ்ரப் ஏ சமத் –கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்துக்கு புதிய வாகனமொன்றினை, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நேற்று திங்கட்கிழமை கையளித்தார்.கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து மேற்படி புதிய வாகனத்தை, பிரதியமைச்சர் கையளித்தார்.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி  டொக்டர் நாகூர் ஆரிப், புதிய வாகனத்தை பிரதியமைச்சரிடமிருந்து பெற்றுக்

மேலும்...
தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள் 0

🕔23.Apr 2017

முஸ்லிம்களுக்கென தனியான, பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக, தனவந்தர்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதிய ’சமூகமே பதில் சொல்’  மற்றும் ‘இருதீபங்கள்’ ஆகிய  நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி

மேலும்...
குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி

குளவி கொட்டிய தோட்டத் தொழிலாளர்கள் 11 பேர், வைத்தியசாலையில் அனுமதி 0

🕔22.Apr 2017

– க. கிஷாந்தன் –தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்களை குளவிகள் கொட்டியமையினால், 11 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தலவாக்கல ஒலிரூட் தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களையே, குளவிகள் கொட்டியுள்ளன. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11 பேரும் பெண் தொழிலாளர்களாவர். குறித்த 11 பேரும்

மேலும்...
முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல்

முஸ்லிம்களை எம்மிடமிருந்து பிரிக்க இந்தியா பணம் வழங்கியது தொடர்பில், மு.கா. தெளிவுபடுத்த வேண்டும்: நாமல் 0

🕔22.Apr 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியை கவிழ்க்க இந்தியா பணம் வழங்கியமை தற்போது ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் ஊடாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது போலஇ இன்னும் எவற்றுக்கெல்லாம் பணம் வழங்கப்பட்டன என்பது தொடர்பில் பல உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கியுள்ள அறிக்கையொன்றிலேயே அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்