இனவாதத்தின் தந்தை சம்பிக்க ரணவக்க, ஐ.தே.கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு ஆபத்தானது: நபுஹான் தெரிவிப்பு 0
பொதுபல சேனாவின் தந்தையான சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது என, பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார்.அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையொன்றிலேயே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;இந்த நாட்டில் ஹலால், புர்கா விடயங்களில் இனவாத விஷத்தை மக்கள் மத்தில் விதைப்பதற்கும், இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி பேசி முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தை கிளப்பி விட்டமைக்கும் முழுக் காரணமாக இருந்த சம்பிக்க ரணவக்க, ஐக்கிய தேசிய கட்சியில் ஒட்டிக்கொண்டிருப்பது தொடர்பில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் எம் சமூகத்துக்கு எதிராக கடும் விஷம கருத்துக்களை விதைத்தவர் சம்பிக்க