Back to homepage

மேல் மாகாணம்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார்

அமைச்சர் பதவியை சுசில் நாளை ஏற்க மாட்டார் 0

🕔24.Feb 2018

சுசில் பிரேமஜயந்த – நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ள மாட்டார் என தெரியவருகிறது. ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்கப் போவதில்லையென, அவர் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு அமையவே, இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளைய தினம் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில்

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை

அமைச்சரவை மாற்றத்தின் போது, ரவிக்கு பதவியில்லை; ஜனாதிபதிக்கு பிரதமர் அனுப்பிய பட்டியலிலும் பெயரில்லை 0

🕔24.Feb 2018

ரவி கருணாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவிகள் எவையும் வழங்கப்பட மாட்டாது என்று, ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவித்துள்ளன. அமைச்சரவை மாற்றத்தின் போது முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்கு முயற்சிப்பதாகவும், அவர் அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவார் எனவும் செய்திகள் உலவி வந்த நிலையிலேயே, அவருக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி

மேலும்...
இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து

இன்றைய அமைச்சர்கள், நாளை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகலாம்: அமைச்சரவை மாற்றம் குறித்து அமரவீர கருத்து 0

🕔24.Feb 2018

இன்றைய அமைச்சர்கள், நாளை நாடாளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்கலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் நாளைய தினம் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார். அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்; “கடந்த காலத்தில் அமைச்சர்களின் செயற்பாடுகளை

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி 0

🕔24.Feb 2018

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர், இன்று சனிக்கிழடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் இருவரும் மார்ச் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இவர்கள் முதுகு வலியால்

மேலும்...
ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள்

ஒரு கிலோ தங்கத்துடன் மூவர் கைது; பிடிபட்டோர் மூவரும் ஆண்கள் 0

🕔23.Feb 2018

நாட்டிலிருந்து 54 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தைக் கடத்துவதற்கு முயற்சித்த 03 இந்தியர்கள் நேற்று வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இந்தியாவின் மதுரை நகருக்கு நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் விமானத்தில் இவர்கள் பயணிக்கவிருந்தனர். இவர்களிடமிருந்து 10 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் நிறை 916.25 கிராமாகும். இவர்கள் தமது பயணப்

மேலும்...
உதயங்கவை கைது செய்ய, இன்டபோல் நடவடிக்கை

உதயங்கவை கைது செய்ய, இன்டபோல் நடவடிக்கை 0

🕔23.Feb 2018

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்யும் பொருட்டு, சர்வதேச பொலிஸார் (இன்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு 2006 ஆம் ஆண்டு உக்ரைனிலிருந்து 04 மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட போது பாரி நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதில் உதயங்க வீரதுங்கவும் தொடர்புபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே,

மேலும்...
வட்டார ரீதியாக 10 வீதமான பெண் உறுப்பினர்கள் தெரிவு: மஹிந்த தேசப்பிரிய

வட்டார ரீதியாக 10 வீதமான பெண் உறுப்பினர்கள் தெரிவு: மஹிந்த தேசப்பிரிய 0

🕔23.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 10 வீதமான பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இருந்தபோதும், கடந்த 2012ம் ஆண்டில் நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 1.9 வீதமான பெண்களே தெரிவாகியிருந்தனர். எனினும்இ இம்முறைத் தேர்தலில் வட்டார ரீதியாகத் தெரிவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 வீதமாக உயர்வடைந்துள்ளது. வட்டார அடிப்படையில்

மேலும்...
தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு 0

🕔22.Feb 2018

தேசிய அரசாங்கம் தொடருமாயின் அரசாங்கத்திலுள்ள சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து விடுவார்கள் என, பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர்

மேலும்...
மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம்

மைத்திரியை புறக்கணித்து ரணில் வெளியேற்றம்; மோதல் உச்சம் 0

🕔22.Feb 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றுக்கு வருகை தந்த நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையிலிருந்து வெளியேறினார். ஜனாதிபதியின் வருமையை புறக்கணிக்கும் வகையிலேயே, பிரதமர் இவ்வாறு நடந்து கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாபதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான மோதல் உச்ச நிலையை அடைந்துள்ளமை இந்த சம்பவம் வெறிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியேறியதைத் தொடர்ந்து,

மேலும்...
ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார்

ஆறு மாதங்களுக்கு முன்னராகவே, பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவி விலகுகிறார் 0

🕔22.Feb 2018

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன, மார்ச் மாதத்துடன் அவரின் பதவிக் காலத்தை நிறைவுறுத்திக் கொள்ளவுள்ளார். இதனை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அமாரியின் பதவிக் காலம் ஓகஸ்ட் மாதம் வரையில் உள்ள நிலையிலேயே, மார்ச் மாதத்துடன், அவர் தன்னுடைய பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளார். இதனடிப்படையில் மார்ச் 31ஆம் திகதியுடன், பிரிதானியாவுக்கான உயர்ஸ்தானிகள் பதவியிலிருந்து அமாரி விலகிக்

மேலும்...
அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி

அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் பதவியொன்றினைப் பெற்றுக் கொள்ள, ரவி கருணாநாயக்க கடும் முயற்சி 0

🕔22.Feb 2018

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சரவை மாற்றத்தின் போது, அமைச்சுப் பதவியொன்றினைப் பெறுவதற்காக கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என, ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிணைமுறி தொடர்பான சர்ச்சையில் சிக்கியமையினை அடுத்து, ரவி கருணாநாயக்க தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பிணைமுறி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் சட்ட நடவடிக்கை

மேலும்...
அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு

அமைச்சரவை மாற்றம்; பிரதமரின் கோரிக்கையை, ஜனாதிபதி நிராகரிப்பு 0

🕔22.Feb 2018

அமைச்சரவை மாற்றத்தின் போது சில அமைச்சுப் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்திருந்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது. சட்டம் – ஒழுங்கு, நிதி மற்றும் முதலீட்டு அமைச்சுக்களை, தற்போது வழங்கியுள்ளவர்களுக்கே தொடர்ந்தும் வழங்குமாறு பிரதமர் நேற்று புதன்கிழமை விடுத்த கோரிக்கையினையே, ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இதேவேளை அமைச்சரவை மாற்றத்தின்

மேலும்...
உள்ளுராட்சி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு வலியுறுத்தல்

உள்ளுராட்சி உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு வலியுறுத்தல் 0

🕔22.Feb 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் விபரத்தை, வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும் என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி எழுத்து மூலம் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி முதல் உள்ளுராட்சி சபைஉறுப்பினர்களின் பதவிகாலம் ஆரம்பமாக உள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்கான

மேலும்...
அரச ஊழியர்களுக்கு ஜும்ஆ நேரம் மறுப்பு; முறைப்பாட்டினை அடுத்து, அமைச்சர் றிசாட் நடவடிக்கை

அரச ஊழியர்களுக்கு ஜும்ஆ நேரம் மறுப்பு; முறைப்பாட்டினை அடுத்து, அமைச்சர் றிசாட் நடவடிக்கை 0

🕔21.Feb 2018

  அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றவென வழங்கப்பட்டுள்ள விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டுமென, அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த அமைச்சின் செயலாளரை வேண்டியுள்ளார். அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபனவிதிக் கோவையின் XIIஆம் அத்தியாயத்தின் 12 பிரிவின்

மேலும்...
அளுத்கம, பேருவளை கலவரம்; இழப்பீடு பெறுவோரின் பெயர் விபரம் அறிவிப்பு

அளுத்கம, பேருவளை கலவரம்; இழப்பீடு பெறுவோரின் பெயர் விபரம் அறிவிப்பு 0

🕔21.Feb 2018

பேருவளை, அளுத்கம மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு, அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 05 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில் கலவரத்தில் மரணமடைந்தவர்களான ராஸிக் மொஹமட் ஜெய்ரான், மொஹமட் சிராஸ் மற்றும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்