நீருக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது: அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு 0
நீருக்கான கட்டணத்தை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். குருணாகலில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். “நீர் வழங்கல் முகாமைத்துவ திணைக்களத்துக்கு திறைசேரி நிதி வழங்குவதில்லை. உங்களுடைய கடனை நீங்களே செலுத்துங்கள் என்று திறைசேரி கூறுகிறது.