அரசாங்கத்துக்குள் இருக்கும் பிரபல நபர், மக்கள் ஆணைக்கு முரணாக செயற்படுகிறார்: அமைச்சர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு 0
மக்களின் ஆணைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட்டால், அரசாங்கத்துக்குள் எதிர்க்கட்சியாக தானும் அமைச்சர் விமல் வீரவங்சவும் செயற்படுவோம் என்று வழங்கிய வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “இது ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரானதோ, ராஜபக்ஷ குடும்பத்தை பிரிக்க செய்யும் நடவடிக்கையோ அல்ல. ‘வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்று’ என்ற போராட்ட