முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது: மு.கா. தலைவர் ஹக்கீம் 0
“கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. தாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார். “அரசியல்வாதிகள் மட்டுமல்ல, மருத்துவ