செயல்படாத துறைமுகம்: கடல் அரிப்பால் அவதிப்படும் மக்கள் 0
மீன்பிடித் தொழிலுக்கு ஒரு காலத்தில் பேர்பெற்ற இடமாக இருந்ததுதான் இலங்கை ஒலுவில் கடற்கடற்கரைப் பகுதி. நூற்றுக்கணக்கான தோணிகளும், இயந்திரப் படகுகளும் அங்கு மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தன. ஒலுவில் பிரதேசத்திலுள்ள பெருமளவு குடும்பங்கள் மீன்பிடித் தொழில் மூலமாகக் கிடைத்த வருமானத்தில் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்தி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிப்போய் விட்டது.