இணையவெளி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இவ்வருடம் 98 ஆயிரம் வழக்குகள் பதிவு 0
இணையவெளி மூலம் நடைபெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 98,000 வழக்குகள் 2023 ஆம் ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ளதாக, பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்தார். 2022 இல் பதிவாகியிருந்த 1,46,000 சிறுவர் துஷ்பிரயோக வழக்கு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இது குறைவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.