சன நெரிசலுக்குள் வேன் புகுந்ததால் பலர் மரணம்; சாரதி தற்கொலை: ஜேர்மனில் துயரம் 0
ஜேர்மன் – முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் வேன் ஒன்று புகுந்து மோதியதில் ஆகக்குறைந்தது 04 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை அடுத்து, வாகனத்தை செலுத்திய சாரதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த நிலையில், இது ஒரு பயங்காரவாதத் தாக்குதலாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.