“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், நிந்தவூரில் அரசியல் படம் காட்டுகிறார்”: மு.கா. தலைவர் ஹக்கீம் குறித்து, முன்னாள் தவிசாளர் தாஹிர் விமர்சனம் 0
நிந்தவூரில் 1997ஆம் ஆண்டு – முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் – அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்த கலாசார மண்டபத்தை, இதுவரை பூர்த்தி செய்யாத முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம், அந்த ஊரிலுள்ள அரச நிறுவனமொன்றுக்குள் புகுந்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக, ஊடக விளம்பரம் செய்கின்றமை – கேலிக்