தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி 0
இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115.