தேசிய அடையாள அட்டைக்கு பணம் அறவிட, அரசாங்கம் தீர்மானம் 0
தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்காக, அரசாங்கம் பணம் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளது. இதற்கிணங்க, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளும் ஒருவரிடமிருந்து, அதற்காக 100 ரூபா அறவிடப்படவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து, இந்தக் கட்டணம் அறவிடப்படவுள்ளதாக, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.