ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி 0
– க. கிஷாந்தன் – பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலையொன்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசலையின் ஆசிரியர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாணவி ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் இன்று