சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் கைது 0
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸிலுள்ள ஷார்ல் த கோல் விமான நிலையத்தில் காலித் ஏத் அலோடைபி என்பவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சௌதி அரேபியர்களில் இவரும் ஒருவர்