புற்று நோயால் கடந்த ஆண்டு மட்டும் 28 ஆயிரம் பேர் நாட்டில் பாதிப்பு 0
நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் புதிதாக, 28 ஆயிரம் பேர் புற்றுநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளர் என்று, சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 2 ஆம் இடத்தை பிடித்துள்ளதாகவும், குறித்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 2018 ஆம் ஆண்டு உலகில் இனங்காணப்பட்ட புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 18.1 மில்லியன் என, மதிப்பிடப்பட்டுள்ளது.